/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர் பலி
/
மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர் பலி
ADDED : ஏப் 28, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி:திருவண்ணாமலை, வந்தவாசியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 53. இவர், ஓட்டேரி - கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
நிறுவனத்தின் மாடியில் உள்ள ஓட்டை பிரிக்கு பணியில், நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டிருந்தார். அப்போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில், சுப்ரமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.