sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

3 மாத சம்பளம் தரவில்லை பணியாளர்கள் முற்றுகை

/

3 மாத சம்பளம் தரவில்லை பணியாளர்கள் முற்றுகை

3 மாத சம்பளம் தரவில்லை பணியாளர்கள் முற்றுகை

3 மாத சம்பளம் தரவில்லை பணியாளர்கள் முற்றுகை


ADDED : ஜூன் 19, 2025 12:21 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயபுரம், ராயபுரம் மண்டலத்தில் துாய்மை பணி மேற்கொள்ள, ஒப்பந்த அடிப்படையில், 120 துாய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி, மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த சப் - கலெக்டர் முருகானந்தம் தலையிலான அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் பேசி, நிலுவை சம்பளத் தொகையை உடனே வழங்கும்படி தெரிவித்தார். ஒரு வாரத்திற்குள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக, அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில், 2024 டிசம்பரில் 120 பேரை வேலைக்கு எடுத்தனர். சுழற்சி அடிப்படையில் துப்புரவு பணி வழங்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாதம் வரை, ஐந்து மாதங்களுக்கு ஒப்பந்த பணி வழங்கப்பட்ட நிலையில், 8,500, 10,500 ரூபாய் மட்டுமே, ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது, மூன்று மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us