sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரத்து செய்த 50 ரயில்களை மீண்டும் இயக்காததால்... தீராத நெரிசல்!: புதிய கால அட்டவணையில் இணைக்க வலியுறுத்தல்

/

ரத்து செய்த 50 ரயில்களை மீண்டும் இயக்காததால்... தீராத நெரிசல்!: புதிய கால அட்டவணையில் இணைக்க வலியுறுத்தல்

ரத்து செய்த 50 ரயில்களை மீண்டும் இயக்காததால்... தீராத நெரிசல்!: புதிய கால அட்டவணையில் இணைக்க வலியுறுத்தல்

ரத்து செய்த 50 ரயில்களை மீண்டும் இயக்காததால்... தீராத நெரிசல்!: புதிய கால அட்டவணையில் இணைக்க வலியுறுத்தல்

4


UPDATED : டிச 19, 2025 05:44 AM

ADDED : டிச 19, 2025 05:04 AM

Google News

UPDATED : டிச 19, 2025 05:44 AM ADDED : டிச 19, 2025 05:04 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பராமரிப்பு பணி என்ற பெயரில், ஓராண்டுக்கு முன் ரத்து செய்யப்பட்ட, 50 புறநகர் மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படாததால், சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில், பயணியர் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணியர் விபத்தில் சிக்கும் சூழல் நிலவுவதால், ரத்தான ரயில்களின் சேவையை மீண்டும் துவக்கும் வகையில், அடுத்த மாதம் முதல் வாரம் வெளியாக உள்ள ரயில்வே புதிய கால அட்டவணையில் இணைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல் -- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு வழித்தடங்களில், தினமும் 600 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஒன்பது லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடக்க உள்ளதாக கூறி, கடந்த ஆண்டில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் தடத்தில், 50 மின்சார ரயில்களும், மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், வழக்கமாகச் செல்லும் ரயில்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலில் பயணியர் சிக்கி அவதிப்படுகின்றனர்.

ஆபத்தான நிலையில், மின்சார ரயில்களின் படிகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பு பணி


இதுகுறித்து, திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்க செயலர் முருகையன் கூறியதாவது:

சென்னை புறநகரில் மின்சார ரயில்களின் தேவை, பல மடங்கு அதிகரித்து வருகிறது.

போதிய மின்சார ரயில்கள் இல்லாததால், அலுவலக நேரங்களில் பயணியர் நெரிசலில் சிக்கி பயணம் செய்து வருகின்றனர். பராமரிப்பு பணியை காரணம் காட்டி, 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை, கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இன்னும் இந்த ரயில்களின் சேவை துவங்கப்படவில்லை. இந்த ரயில்களின் சேவையை மீண்டும் துவங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை, வரும் புதிய கால அட்டவணையில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடிப்படை வசதி



இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம், ரயில் சேவை நீட்டிப்பு, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதி மேம்படுத்துவது குறித்து, பயணியர் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.

மேலும், ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள் மீண்டும் இயக்குவது குறித்து, நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாக உள்ள புதிய கால அட்டவணையில், இதற்கான அறிவிப்புகள் இடம்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இரவு நேர ரயில்களும் ரத்து பராமரிப்பு பணிக்காக, கடந்த ஆண்டு சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் தடத்தில், இரவு 11:50, 12:00 மணி ரயில்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால், கும்மிடிப்பூண்டிக்கு கடைசி ரயில் சேவை, இரவு 11:20 மணியோடு முடிந்து விடுகிறது. இதனால், இரவு நேரங்களில் பணியை முடித்து செல்வோர் கடுமையாக அவதிப்படுகின்றனர். பயணியர் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்கள், கால்டாக்சிகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. தினமும் கூடுதல் பணம் கொடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



விரைவு ரயில்கள் கூடுதலாக தேவை சென்னை - செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் போன்ற புறநகர் பகுதிகளில் இருந்து, சென்னைக்கு வந்து செல்ல இயக்கப்படும், 'பாஸ்ட் ரயில்கள்' மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஆனால், போதிய அளவில் ரயில்கள் இல்லை. சென்னைக்கு உட்பகுதியில் மெட்ரோ ரயில் வசதி இருக்கிறது. புறநகரில் மின்சார ரயில்களை நம்பியே அதிக பயணியர் இருக்கின்றனர். எனவே, புறநகரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



செங்கையில் 'வந்தே பாரத்' நிற்கணும் செங்கல்பட்டு மாவட்டத்தில், பல்லவர் கால சிற்பங்கள் உள்ள மாமல்லபுரம், அணுசக்தி மையம் இயங்கும் கல்பாக்கம், சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா, மகேந்திரா சிட்டி தொழில் நகரம், மறைமலை நகர் தொழிற்பேட்டை ஆகியவை உள்ளன. செங்கல்பட்டில் இருந்து, 35 கி.மீ., தொலைவில், கோவில்கள் நிறைந்த ஆன்மிக தலம் மற்றும் பட்டு ஆடைகள் உற்பத்தி இடமான காஞ்சிபுரம் உள்ளது. இப்பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். அப்பகுதிகளில் இருந்தும், இங்கு வருகின்றனர். இப்பயணியர் ரயில்கள், அரசு பேருந்து, தனியார் பேருந்துகள் ஆகியவற்றில், சிரமத்துடன் பயணம் செய்கின்றனர். ரயில் பயணத்திற்கு, செங்கல்பட்டு ரயில் நிலையமே முக்கிய சந்திப்பாக உள்ள நிலையில், இவ்வழியே செல்லும் 'வந்தே பாரத்' ரயில்களுக்கு, இங்கு நிறுத்தம் இல்லை. சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், சென்னையை அடுத்து, விழுப்புரத்தில் தான் நிறுத்தப் படுகின்றன. எனவே, தலைநகர் சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பகுதிகளின் முக்கியத்துவம் கருதி, வந்தே பாரத் ரயில்களை, செங்கல்பட்டில் நிறுத்திச் செல்ல, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், லோக்சபா கூட்டத்திலும் வலியுறுத்தி உள்ளார்.








      Dinamalar
      Follow us