sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் உதவி பொறியாளருக்கு சிறை

/

குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் உதவி பொறியாளருக்கு சிறை

குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் உதவி பொறியாளருக்கு சிறை

குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் உதவி பொறியாளருக்கு சிறை


ADDED : டிச 30, 2024 01:10 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையைச் சேர்ந்த பரந்தாமன் என்பவர், கடந்த 2013ல் தன் வீட்டிற்கு புதிய குடிநீர் இணைப்பு கேட்டு, தண்டையார்பேட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் விண்ணப்பித்தார்.

விண்ணப்பத்தை பரிசீலித்த தண்டையார்பேட்டை குடிநீர் வழங்கல் வாரிய உதவி பொறியாளர் பார்த்தசாரதி,இணைப்பு வழங்க, 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பரந்தாமன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி, லஞ்ச பணத்தை பரந்தாமன் கொடுத்த போது பார்த்தசாரதி கையும், களவுமாக சிக்கினார்.

இந்த வழக்கு விசாரணை, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பிரியா முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பார்த்தசாரதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம்ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us