/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதைக்கப்பட்ட உடலை தோண்டி விசாரணை
/
புதைக்கப்பட்ட உடலை தோண்டி விசாரணை
ADDED : டிச 31, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நொளம்பூர், நொளம்பூர், மாதா கோவில் நகரைச் சேர்ந்தவர் சரவணன், 46. உடல் நலக்குறைவால் கடந்த 20ம் தேதி உயிரிழந்தார். இறுதி சடங்குகள் முடிந்து, நொளம்பூர், யூனியன் சாலையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சரவணனின் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர் பொன்னன் புகார் அளித்தார்.
அதன்படி, வழக்கு பதிந்த போலீசார், தாசில்தார் ஜெயபிரகாஷ் முன்னிலையில், சரவணனின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.