/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரை வழி மின்சாரம் வழங்க வில்லிவாக்கத்தில் எதிர்பார்ப்பு
/
தரை வழி மின்சாரம் வழங்க வில்லிவாக்கத்தில் எதிர்பார்ப்பு
தரை வழி மின்சாரம் வழங்க வில்லிவாக்கத்தில் எதிர்பார்ப்பு
தரை வழி மின்சாரம் வழங்க வில்லிவாக்கத்தில் எதிர்பார்ப்பு
ADDED : டிச 09, 2025 05:20 AM
வில்லிவாக்கம்: ஆபத்தான வான்வழி மின்வடங்களுக்கு பதிலாக, நிலத்திற்கடியில் மின் கேபிள் புதைத்து மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என, வில்லிவாக்கம் பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அண்ணா நகர் மண்டலம், திருமங்கலம் சாலை, 1வது லைன் தெருவிலுள்ள வீடுகளுக்கு, மின் கம்பங்களின் வாயிலாக, வான் வழியாக மின் வடங்களில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்த மின் வடங்கள் ஆபத்தான நிலையிலேயே இருப்பதால், பொதுமக்களிடம் அச்சம் நிலவுகிறது. எனவே, நிலத்திற்கடியில் வடங்கள் புதைத்து, அதன் வழியே மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என, அப்பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
சிட்கோ நகரில் சில தெருக்கள், கம்பர் காலனியில் எட்டு தெருக்கள், திருமங்கலம் முதலாவது லைன் உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக, வான் வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.
சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களிலேயே, மின் வினியோகம் நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட மின்வடத்தில் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய சென்னையில் அமைந்துள்ள வில்லிவாக்கத்தில், இன்னும் பல இடங்களில் வான் வழியே தான் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இப்பகுதிகளில் நிலத்திற்கடியில் மின் வடங்களை புதைக்க, புதிய சாலை அமைக்கும் போதே குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் தொங்கும் வகையில் உள்ள வான்வழி மின்வடங்களை, நிலத்திற்கடியில் புதைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

