/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறிப்பு
/
ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறிப்பு
ADDED : நவ 10, 2024 12:31 AM
வளசரவாக்கம், நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், 23 வயது கல்லுாரி மாணவி. இவர் விடுமுறை நாட்களில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருவது வாடிக்கை.
கடந்த 2023 டிசம்பரில், இன்ஸ்டாகிராம் வாயிலாக சுஜித் என்பவர் அறிமுகமானார். இவர்கள் பேசி, பழகி வந்த நிலையில், சுஜித் தனக்கு தானே கத்தியால் கீரிக் கொண்டு, இளம் பெண்ணை நிர்வாணமாக, வீடியோ கால் செய்யும்படி வற்புறுத்தி உள்ளார்.
இதையடுத்து, இரு முறை நிர்வாணமாக வீடியோ கால் செய்துள்ளார். அந்த ஆபாச படங்களை, கடந்த ஏப்ரலில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சுஜித், இளம் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பலமுறை மிரட்டி, நகை மற்றும் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 8 ம் தேதி, 50,000 ரூபாய் தராவிட்டால், மீதமுள்ள ஆபாச படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.