sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஜமாபந்தியில் சிக்கிய போலி வி.ஏ.ஓ., கைது

/

ஜமாபந்தியில் சிக்கிய போலி வி.ஏ.ஓ., கைது

ஜமாபந்தியில் சிக்கிய போலி வி.ஏ.ஓ., கைது

ஜமாபந்தியில் சிக்கிய போலி வி.ஏ.ஓ., கைது


ADDED : மே 23, 2025 03:03 AM

Google News

ADDED : மே 23, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, சிட்ரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்.

இவர், நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், தன் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய மனு எடுத்து வந்தார்.

அம்முகாமில், வருவாய் துறை அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டிருந்த ஒரு நபர், சந்திரசேகரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தான் வி.ஏ.ஓ., எனவும், 4,000 ரூபாய் தந்தால் பட்டா மாற்றி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய சந்திசேகர் 1,000 ரூபாயை தந்து விட்டு, மீதி பணம் பின் தருவதாக கூறியுள்ளார். எனினும், அந்நபரை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துகொண்டார்.

நேற்று, பணம் வாங்கிய நபரை, தாலுகா அலுவலக வளாகத்தில் காண முடியாததால், சந்தேகமடைந்த சந்திரசேகர், மொபைல் போனில் எடுத்த புகைப்படத்தை அங்குள்ள அரசு அலுவலர்களிடம் காண்பித்து விசாரித்தார். அப்போது, அவர் போலி வி.ஏ.ஓ., என்பது தெரியவந்தது.

இதையடுத்து சந்திரசேகர், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே சந்திரசேகரிடம் மீதி தொகையை வாங்க, தாலுகா அலுவலகம் வந்த நபரை, போலீசார் பிடித்தனர்.

விசாரணையில் அவர், பெரியபாளையம் அடுத்த வடமதுரை காலனியைச் சேர்ந்த செல்வின், 41, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us