/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொய் வழக்கு பதிவு விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
/
பொய் வழக்கு பதிவு விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
பொய் வழக்கு பதிவு விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
பொய் வழக்கு பதிவு விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 10, 2024 12:52 AM
காஞ்சிபுரம், நவ. 10--
ஸ்ரீபெரும்புதுாரில் ராஜலட்சுமி டிராவல்சில் சிவானந்தம் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிறுவன பேருந்துகளை அடித்து நொறுக்கிய வழக்கில், 2023 நவம்பரில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் கைது செய்தனர்.
அப்போது, ஸ்ரீபெரும்பதுார் காவல் ஆய்வாளராக பரந்தாமன், உதவி ஆய்வாளராக துளசி பணியாற்றி வந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த சிவானந்தம், பொய் வழக்கில் தன்னை கைது செய்ததாக, காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
மேலும், 2023, நவம்பரில், தீபாவளி விடுமுறையில் பரமக்குடி சென்றதாகவும், ஸ்ரீபெரும்புதுாரில் தான் இல்லை என்பதற்கான ஆதாரங்களையும் சமர்பித்தார்.
இதைத் தொடர்ந்து, உத்திரமேரூரில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் பரந்தாமனை, சஸ்பெண்ட் செய்து, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., திஷாமிட்டல் உத்தரவிட்டார். திருவள்ளூரில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் துளசியையும், அந்த மாவட்ட எஸ்.பி., சஸ்பெண்ட் செய்துள்ளார்.