/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
/
மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
ADDED : நவ 04, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுஞ்சூர்: செங்கல்பட்டு அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு, பச்சம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன், 35; கூலித்தொழிலாளி. வழக்கம் போல, நேற்று வெளிக்காடு பகுதியில் உள்ள பி.ஜி.ஆர்., தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை 3:30 மணியளவில் மழை பெய்தபோது, வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த குப்பன் மீது மின்னல் பாய்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து அணைக்கட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

