sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விமானத்தில் பெண் பயணி உயிரிழப்பு

/

விமானத்தில் பெண் பயணி உயிரிழப்பு

விமானத்தில் பெண் பயணி உயிரிழப்பு

விமானத்தில் பெண் பயணி உயிரிழப்பு


ADDED : பிப் 25, 2024 12:02 AM

Google News

ADDED : பிப் 25, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய் நகரில் இருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை 268 பயணியருடன், மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்தது.

விமானம் நடுவானில் செல்லும்போது, மலேஷியா நாட்டைச் சேர்ந்த பெண் பயணியான ரஷிதா அகமத், 57, என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

விமானம், சென்னை வான்வெளியில் பறந்து கொண்டு இருப்பதை அறிந்த விமானி, டில்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

அனுமதி கிடைத்ததையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நேற்று காலை அவசரமாக தரையிறங்கியது. விமான நிலைய மருத்துவக்குழுவினர், விமானத்துக்குள் ஏறி ரஷிதாவை சோதித்தனர். இதில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. விசாரணையில், சவுதி அரேபியா ஜெட்டா நகருக்கு புனித பயணமாக சென்று விட்டு, மீண்டும் மலேஷியா திரும்பி செல்லும்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us