sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நிதி நிறுவனம் மோசடி மீண்டும் விசாரணை

/

நிதி நிறுவனம் மோசடி மீண்டும் விசாரணை

நிதி நிறுவனம் மோசடி மீண்டும் விசாரணை

நிதி நிறுவனம் மோசடி மீண்டும் விசாரணை


ADDED : அக் 31, 2025 12:19 AM

Google News

ADDED : அக் 31, 2025 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் செயல்பட்டு வந்த, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோரிடம், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில், அக்குவேலன் சிட்ஸ் பி.லிட்., என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பொதுமக்கள் முதலீடு செய்த 40 லட்சம் ரூபாயை, அதன் நிர்வாகிகள் மோசடி செய்தது தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதால், பாதிக்கப்பட்ட நபர்களிடம் போலீசார் மீண்டும் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில்,'பாதிக்கப்பட்டோர் யாரையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக, முழு விசாரணை நடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சொத்துகள் உள்ளதா என்பது குறித்தும், ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us