sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பேப்பர் ரோல் கிடங்கில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருட்கள் சேதம்

/

பேப்பர் ரோல் கிடங்கில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருட்கள் சேதம்

பேப்பர் ரோல் கிடங்கில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருட்கள் சேதம்

பேப்பர் ரோல் கிடங்கில் தீ விபத்து ரூ.பல லட்சம் பொருட்கள் சேதம்


ADDED : ஜன 27, 2025 03:00 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:திருவொற்றியூர், துளசிராம் நகரில், 'வைகுண்ட செல்வம் என்டர்பிரைசஸ்' என்ற பெயரில், பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பேப்பர் ரோல் கிடங்கு உள்ளது.

இதே வளாகத்தில், பழைய கார்களின் உதிரிபாகங்களை பிரித்து, விற்பனை செய்யும் பணியும் மேற்கொள்வதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் 1:00 மணிக்கு, இந்த கிடங்கில் இருந்து குபுகுபுவென கரும்புகை கிளம்பியது.

சுதாரித்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறை மற்றும் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் தென்னரசு, உதவி மாவட்ட அலுவலர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில், மணலி, எண்ணுார், திருவொற்றியூர், அம்பத்துார் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

மேலும், 30க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகளும் பயன்படுத்தப்பட்டன. இதில், 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

இருப்பினும், 5,000 சதுர அடிக்கும் அதிகமான இடத்தில், டன் கணக்கில் வைக்கப்பட்டிருந்த பேப்பர் ரோல்கள், பிளாஸ்டிக் மற்றும் பழைய கார்களால் தீ கட்டுக்குள் வரவில்லை. அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. இரவு வரை தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. விடுமுறை காரணமாக, கிடங்கு மூடப்பட்டிருந்ததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் கூறுகின்றனர்.

இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்த தீ விபத்தால், சுற்றுவட்டார மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டனர்.






      Dinamalar
      Follow us