ADDED : ஏப் 02, 2026 08:57 PM

அ நிறம் | அளவு
எண்ணுார்: குப்பையை தரம் பிரிக்கும் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
எண்ணுார் அடுத்த எர்ணாவூர் அனல் மின் நிலைய குடியிருப்பு வெளிப்புறம் - கத்திவாக்கம் நெடுஞ்சாலையோரம், குப்பை தரம் பிரிக்கும் கூடம் உள்ளது. இங்கு, துாய்மை பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம், மக்கும், மக்கா குப்பையை தரம் பிரித்து இருப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், குப்பை தரம் பிரிக்கும் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, கொழுந்து விட்டெரிந்தது. அக்கம் பக்கத்தினர் சுதாரித்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
எண்ணுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
