ADDED : செப் 27, 2025 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிராட்வே, தென் சென்னை அனைத்து மீனவ கிராம சபை ஒருங்கிணைப்பாளர் ரத்னவேல் தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பாரம்பரிய மீனவ மக்களின் வாழ்வுரிமைகளை பறிக்கும் மெரினா, தாழங்குப்பம், திருவான்மியூர், ஆலம்பாக்கம், உத்தண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நீலக்கொடி உள்ளிட்ட திட்டம், மெரினா கடற்கரையில் கொண்டு வரப்படும் 'ரோப் கார்' திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
இதில், 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.