sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோஷ்டி மோதல் ஐந்து பேர் கைது

/

கோஷ்டி மோதல் ஐந்து பேர் கைது

கோஷ்டி மோதல் ஐந்து பேர் கைது

கோஷ்டி மோதல் ஐந்து பேர் கைது


ADDED : மே 27, 2025 11:54 PM

Google News

ADDED : மே 27, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு :கொடுங்கையூர், சேலவாயில் பகுதியைச் சேர்ந்தவர் 'ஸ்பீடு' சஞ்சய் என்கிற சுகுமார், 23; சரித்திர பதிவேடு ரவுடி. இவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், புளியந்தோப்பு ஆடுதொட்டி பின்புறம் உள்ள வ.உ.சி நகருக்கு நண்பருடன் சென்றுள்ளார்.

அப்போது வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி 3வது தெருவில் வசிக்கும் 'பாவாடை' சஞ்சய், 18, என்பவரும் அங்கே நண்பர்களுடன் இருந்தார். அப்போது இருதரப்பு இடையே வீண்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர். இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ‛பாவாடை' சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், சுகுமாரை வெட்டிய புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 24, கோகுல்நாத், 25, விக்னேஷ், 26, ஆகியோரை கைது செய்தனர். அதேபோல, எதிர் தரப்பில் சுகுமார், 23, சூர்யா, 20, என, இருவர் கைது செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us