sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உணவு வழங்கும் திட்டம் துாய்மை பணியாளர்களுடன் சாலை பணியாளர்களும் சேர்ப்பு

/

உணவு வழங்கும் திட்டம் துாய்மை பணியாளர்களுடன் சாலை பணியாளர்களும் சேர்ப்பு

உணவு வழங்கும் திட்டம் துாய்மை பணியாளர்களுடன் சாலை பணியாளர்களும் சேர்ப்பு

உணவு வழங்கும் திட்டம் துாய்மை பணியாளர்களுடன் சாலை பணியாளர்களும் சேர்ப்பு


ADDED : நவ 09, 2025 04:00 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, வரும் 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தில், சாலை பணியாளர்களையும் சேர்க்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, இலவச உணவு வழங்கப்படும் என, ஆக., 4ம் தேதி அரசு அறிவித்தது. முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

இதன்படி, சென்னை மாநகராட்சியில், 30,000 பேருக்கு உணவு வழங்க, 186 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், காலை 47, மதியம் 57, இரவு 42 ரூபாயில் உணவு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை, வரும் 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் சாலை பணியாளர்களுக்கும் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சியில், 1,800க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் உள்ளனர்.

இவர்களில், மாற்றுப்பணியாக அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர் போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு உணவு இல்லை. சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு மட்டும், உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us