sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவர்களுடன் கலந்துரையாடிய 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர்

/

மாணவர்களுடன் கலந்துரையாடிய 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர்

மாணவர்களுடன் கலந்துரையாடிய 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர்

மாணவர்களுடன் கலந்துரையாடிய 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர்


ADDED : ஜன 25, 2024 12:52 AM

Google News

ADDED : ஜன 25, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், நேற்று மதியம், ரோபோடிக் கண்காட்சி நடந்தது. இதில், 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டு கலந்துரையாடினார்.

பின், அவர் கூறியதாவது:

ரோபோடிக் கண்காட்சியில், 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்று, மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். வருங்காலங்களில், பல்வேறு துறைகளில் இயந்திர மனிதன் பயன்படுத்தப்பட உள்ளது.

மாணவர்கள் கல்லுாரி செல்வதற்கு முன்பாக, பள்ளிக் காலங்களில் நிச்சயம் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்புகளை நிச்சயம் பள்ளிகள் உருவாக்க வேண்டும்.

மற்ற துறைகளைப் போல், அறிவியலிலும் வளர வேண்டும். அறிவியல் தான் பிற்காலம் என்பதை, மாணவர்கள் உணர வேண்டும். சந்திரயான் - 2 மற்றும் 3க்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை.

பலமுறை சோதித்து, தவறுகள் திருத்தப்பட்டதால், 'சந்திரயான் - 3' வெற்றி பெற்றது.

சூரிய புயல் புதிதல்ல; ஆனால், பாதிப்பு அதிகம் இருக்கும். அதன் மூலம், செயற்கைக் கோள்கள் பாதிக்கும். மனித அன்றாட நடைமுறை பாதிக்க நேரிடும்.

'ஆதித்யா எல் - 1' ஆல், சூரிய புயலை முன் கூட்டியே தெரிவிக்க முடியும். அதன் வழியாக, செயற்கைக் கோள்களை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us