ADDED : மார் 18, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
ஆதம்பாக்கம்: கீழ்ப்பாக்கம், மண்டபம் சாலையை சேர்ந்தவர் லோகநாதன், 28. 'பி' -பிரிவு குற்றவாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு ஆதம்பாக்கம், காவல் எல்லையில், சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமினில் வெளியே வந்து, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
