ADDED : பிப் 16, 2026 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜமங்கலம்: அடிதடி வழக்கில், ஜாமினில் வந்து தலைமறைவான வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொளத்துார், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் வினோத், 24. இவர், 2021ம் ஆண்டு, ராஜமங்கலம் போலீசாரால், அடிதடி வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
இந்நிலையில், வினோத்தை பிடிக்க எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்தாண்டு உத்தரவிட்டது. அதன்படி, ராஜமங்கலம் போலீசார் வினோத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொளத்துார் அருகே சுற்றித்திரிந்த வினோத்தை, ராஜமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

