sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையோரம் குப்பை குவிப்பு நியூ ஆவடி சாலையில் சீர்கேடு

/

சாலையோரம் குப்பை குவிப்பு நியூ ஆவடி சாலையில் சீர்கேடு

சாலையோரம் குப்பை குவிப்பு நியூ ஆவடி சாலையில் சீர்கேடு

சாலையோரம் குப்பை குவிப்பு நியூ ஆவடி சாலையில் சீர்கேடு


ADDED : மார் 15, 2024 12:21 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், அயனாவரம் பகுதிக்கு உட்பட நியூ ஆவடி சாலையோரத்தில், அத்துமீறி கொட்டப்படும் குப்பையால் சீர்கேடு நிலவுகிறது.

அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில் வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலை உள்ளது. இதில், பாடியை நோக்கிச் செல்லும் பாதையின் சாலையோரம் ஐ.சி.எப்., ரயில்வேக்கு சொந்தமான நிலங்களும், வில்லிவாக்கம் - அண்ணா நகரை நோக்கிச் செல்லும் சாலையோரம், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடங்களும் உள்ளன.

இந்த இருபுறங்களில் உள்ள சாலையோரங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், சாலை சுருங்கியதுடன், எப்போதும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.

இதில், அண்ணா நகரை நோக்கி செல்லும் பாதையில், அயனாவரம் சக்கரவர்த்தி நகர் அருகில் உள்ள குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், சாலையோரத்தில் சிலர் அத்துமீறி குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால், சாலை முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, குப்பையை அகற்றி, குடிநீர் வாரிய இடத்தில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us