தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/லாரி மோதி உடைந்த கேட்: ரயில் சேவை பாதிப்பு

லாரி மோதி உடைந்த கேட்: ரயில் சேவை பாதிப்பு

லாரி மோதி உடைந்த கேட்: ரயில் சேவை பாதிப்பு


ADDED : மார் 07, 2024 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், தினமும் 40,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், இந்த சாலையில் சென்று வருகின்றன.

இந்த சாலையில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. நேற்று காலை 8:45க்கு ரயில்வே கேட் மூடும் போது, ஒரகடத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் சென்ற, ஐச்சர் சரக்கு வாகனம், ரயில்வே கேட்டில் மோதியது. இதில், கேட் உடைந்தது.

அதனால், ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இருபுறமும், 1 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதேபோல, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், சென்னை கடற்கரை-, செங்கல்பட்டு இடையே சென்ற புறநகர் மின்சார ரயில்கள், சிக்னல் கிடைக்காமல் அங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பயணியர் அவதியடைந்தனர்.

தகவல் அறிந்து செங்கல்பட்டிலிருந்து வந்த ரயில்வே ஊழியர்கள், இரண்டு மணிநேரம் போராடி ரயில்வே கேட்டை சரி செய்தனர். அதன்பின், அனைத்து சிக்னல்களும் வேலை செய்யத் துவங்கின.

தொடர்ந்து, நண்பகல் 12:00 மணிக்கு ரயில் போக்குவரத்து இயல்புக்கு வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us