sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மனிதநேய அறக்கட்டளையின் 27 பேர் 'குரூப் 1'ல் வெற்றி

/

மனிதநேய அறக்கட்டளையின் 27 பேர் 'குரூப் 1'ல் வெற்றி

மனிதநேய அறக்கட்டளையின் 27 பேர் 'குரூப் 1'ல் வெற்றி

மனிதநேய அறக்கட்டளையின் 27 பேர் 'குரூப் 1'ல் வெற்றி


ADDED : மே 11, 2025 12:45 AM

Google News

ADDED : மே 11, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சமூக மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்களுக்கும் உதவும் வகையில், சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை செயல்படுகிறது. இங்கு, அரசு பணியாளர் தேர்வில் பயிற்சி பெற்று, வெற்றி பெற்ற பல மாணவர்கள் அரசு பணிகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், 96 காலி பணியிடங்களுக்கான 'குரூப் - 1' தேர்வுக்கான அறிவிப்பை, 2024 ஜனவரியில் வெளியிட்டது.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என, மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, இம்மாதம், 9ம் தேதி வெளியிடப்பட்ட தர வரிசை பட்டியலில், மனிதநேய அறக்கட்டளை கட்டணமில்லா கல்வியகத்தில் பயின்ற, 27 மாணவ - மாணவியர் தேர்வாகியுள்ளனர்.

அதன்படி, இரண்டு பேர் துணை கலெக்டர், ஒன்பது பேர் டி.எஸ்.பி., ஐந்து பேர் வணிக வரி துறை உதவி கமிஷனர், எட்டு பேர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மூன்று பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்களுக்கு ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us