sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐந்து கோவில்களில் திருட்டு ஸ்ரீபெரும்புதுாரில் துணிகரம்

/

ஐந்து கோவில்களில் திருட்டு ஸ்ரீபெரும்புதுாரில் துணிகரம்

ஐந்து கோவில்களில் திருட்டு ஸ்ரீபெரும்புதுாரில் துணிகரம்

ஐந்து கோவில்களில் திருட்டு ஸ்ரீபெரும்புதுாரில் துணிகரம்


ADDED : மே 29, 2025 12:38 AM

Google News

ADDED : மே 29, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, குண்டுபெரும்பேடு கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அஞ்சநேயர் கோவிலில், ஐம்பொன்னாலான ராமர், சிதை, லட்சுமணன் சிலைகள் உள்ளன. இக்கோவிலை, அதே பகுதியைச் சேர்ந்த சின்னமன்னார் என்பவர் பராமரித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை, சின்னமன்னார் வழக்கம்போல கோவிலுக்கு சென்றபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த லட்சுமணன் சிலை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள பெண்டாலம்மன் கோவில், செல்லியம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல, ஒட்டன்காரணை கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் மற்றும் சிவன் கோவில் பூட்டை உடைந்து, 3 அடி கத்தி, குத்து விளக்கு, மைக்செட், ஆம்ப்ளிபயர், மின்சார அடுப்பு உள்ளிட்டவை திருடப்பட்டு உள்ளன.

இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளித்ததையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி., கீர்த்திவாசன் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகிறார். இச்சம்பவங்கள் ஸ்ரீபெரும்புதுாரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us