ADDED : ஏப் 15, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகரை சேர்ந்த லோகநாதன் மகள் ஜனனி, 6. நேற்று, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, ஜனனி மீது பக்கத்து வீட்டில் உள்ள நாய் பாய்ந்து கடித்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி, அரசு மருத்துவமனையில், காலில் ஏழு தையல் போடப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
லோகநாதன், சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார், நாயின் உரிமையாளர் மாலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.