ADDED : மார் 21, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்,:அம்பத்துார், புதுாரைச் சேர்ந்தவர் மனோகரன், 31. இவர் நடத்தும் பால், ஐஸ்கிரீம் விற்பனை கடையில், அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா, 75, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை 10:15 மணிக்கு, கடைக்கு வந்த இருவர், ஐஸ்கிரீம் வாங்கி, 100 ரூபாய் தந்து, பாக்கி பணத்தை சில்லரையாக கேட்டுள்ளனர்.
அப்போது, முதியவரின் கவனத்தை திசை திருப்பி, கல்லாப்பெட்டியில் இருந்து, 6,000 ரூபாயை திருடிச் சென்றனர்.
'சிசிடிவி' காட்சியை பார்த்தபின், மர்ம நபர்கள் பணத்தை திருடியது தெரிந்தது. அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.