/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு ஊழியர், ஐ.ஏ.எஸ்., வீடு வாங்க முன்பணம் நெற்குன்றம் திட்டத்துக்காக உயர்த்தி தர அனுமதி
/
அரசு ஊழியர், ஐ.ஏ.எஸ்., வீடு வாங்க முன்பணம் நெற்குன்றம் திட்டத்துக்காக உயர்த்தி தர அனுமதி
அரசு ஊழியர், ஐ.ஏ.எஸ்., வீடு வாங்க முன்பணம் நெற்குன்றம் திட்டத்துக்காக உயர்த்தி தர அனுமதி
அரசு ஊழியர், ஐ.ஏ.எஸ்., வீடு வாங்க முன்பணம் நெற்குன்றம் திட்டத்துக்காக உயர்த்தி தர அனுமதி
ADDED : நவ 08, 2024 12:29 AM
சென்னை, சென்னை நெற்குன்றம் வீட்டு வசதி வாரிய திட்டத்துக்காக, அரசு ஊழியர்கள், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அகில இந்திய பணி அலுவலர்களுக்கு, வீடு வாங்க வழங்கப்படும் முன்பணத்தில், கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட அகில இந்திய பணி அலுவலர்கள், சொந்த வீடு வாங்க அல்லது கட்டுவதற்கான செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு முன்பணமாக வழங்குகிறது.
ரூ.75 லட்சம்
வங்கியில் கடன் வாங்குவதற்கு பதிலாக, அரசிடம் முன்பணமாக இத்தொகையை அவர்கள் பெறலாம்.
சம்பந்தப்பட்ட பணியாளர்கள், அலுவலர்களின் மாத ஊதியத்தில் இத்தொகை தவணைகளாக பிடித்தம் செய்யப்படும். இந்த வகையில், அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணம், 50 லட்ச ரூபாயாகவும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கு, 75 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.
இதில் அரசு ஊழியர்களுக்கு 10 லட்ச ரூபாய், அகில இந்திய பணி அலுவலர்களுக்கு 20 லட்ச ரூபாய் கூடுதல் முன்பணமாக வழங்க வழிவகை உள்ளது.
இந்நிலையில், வீட்டுவசதி வாரியத்தின் நெற்குன்றம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில், வீடு வாங்க அரசு ஊழியர்கள், அகில இந்திய பணி அலுவலர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
கடிதம்
இத்திட்டத்தில் வீடுகளின் விலை மற்றும் ஜி.எஸ்.டி., வகையில் கூடுதல் தொகையை செலுத்த வீட்டுவசதி வாரியம் அறிவுறுத்தி உள்ளது. செலவுகள் உயர்ந்த நிலையில் இதை சமாளிக்க, அரசு ஊழியர்கள் மற்றும் அகில இந்திய பணி அலுவலர்களுக்கு கூடுதல் தொகை தேவைப்படுகிறது.
இதில் பெரும்பாலானோர், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு வீடு கட்டும் முன்பணத்தை பெற்றுவிட்டனர். எனவே இவர்களுக்கு கூடுதலாக, ஐந்து லட்ச ரூபாய் முன்பணமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக, தமிழக மின் பகிர்மான கழகத்தின் இணை நிர்வாக இயக்குனர், விசு மகாஜன் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதை ஏற்று, நெற்குன்றம் திட்டத்துக்காக, அரசு ஊழியர்களுக்கான கூடுதல் முன்பணத்தை, 10ல் இருந்து 15 லட்ச ரூபாயாகவும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கான கூடுதல் முன்பணத்தை, 20ல் இருந்து 25 லட்ச ரூபாயாகவும் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.

