ADDED : செப் 22, 2024 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி அடுத்த திருநின்றவூர், திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் செந்தில் குமார், 38; 'ஏசி' மெக்கானிக். இவருக்கு, கடந்த 15ம் தேதி, சுகன்யா என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், சரியாக வேலை கிடைக்காததால், கடந்த சில நாட்களாக செந்தில் குமார் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.