sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இரும்பு கேட் விழுந்து காவலாளி பலி

/

இரும்பு கேட் விழுந்து காவலாளி பலி

இரும்பு கேட் விழுந்து காவலாளி பலி

இரும்பு கேட் விழுந்து காவலாளி பலி


ADDED : ஜன 03, 2025 12:24 AM

Google News

ADDED : ஜன 03, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் அன்பரசு, 56. சோழிங்கநல்லுார், எல்காட் அவென்யூவில் உள்ள என்.பி.எல்., அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு, நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு, தள்ளித் திறக்கும் வகையிலான சக்கரம் பொருத்திய, 8 அடி உயரம் கொண்ட இரும்பு கேட் உள்ளது.

இந்த கேட், பல மாதமாக பழுதடைந்து உள்ளது. நேற்று அதிகாலை, கேட்டை திறந்த போது, பிடிமானம் பெயர்ந்து, அன்பரசு மீது கேட் விழுந்தது.

இதில், அவர் உடல் நசுங்கி பலியானார். செம்மஞ்சேரி போலீசார், பராமரிப்பு மேற்பார்வையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us