ADDED : ஜன 25, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஏழு நாட்களாக வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 1,840 கிலோ குட்கா, 67,000 ரொக்கம், 2 மொபைல்போன்கள், ஆட்டோ, கார், இலகுரக வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.