sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

/

விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை


ADDED : செப் 02, 2025 01:57 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை;விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான உத்தரவுகளை பின்பற்றுவதில் கவனமாக இருக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளை, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்த பகுதியை சேர்ந்த தாமஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல், பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்த உத்தரவுகளை நிறைவேற்ற தவறியதாக, சென்னை மாநகராட்சி கமிஷனர், கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், நேரில் ஆஜராகினர்.

அப்போது அதிகாரிகள் அனைவரும், சூசன் ஜான் என்பவருக்கு சொந்தமான கட்டடம், ஆக., 15ம் தேதி பூட்டி 'சீல்' வைக்கப்பட்டு விட்டது. தாமதமாக நடவடிக்கை எடுத்ததற்காக, நிபந்தனையற்ற மன்னிப்பை கோருவதாகவும் தெரிவித்தனர்.

இதை ஏற்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஆக்கிரமிப்பாளருக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் மற்றும் செயலற்று இருந்துள்ளனர். இது, வேண்டுமென்றே உத்தரவை மீறுவதாகும்.

எனினும், தங்கள் தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை, இந்த நீதிமன்றம் ஏற்கிறது. தாமதம் ஆனாலும், விதிமீறல் கட்டடத்தை பூட்டி 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்துள்ளதால், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை. மனுவை முடித்து வைக்கிறோம்.

அதே நேரம், விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக, நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றுவதில், எதிர்காலத்தில் எச்சரிக்கை மற்றும் கவனமாக இருக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி அதிகாரிகளை எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us