ADDED : பிப் 19, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்:சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், சமீபமாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதை சமாளிக்க, குளிர்பானம், மோர், இளநீர், பழரசம் மற்றும் பழங்களை மக்கள் நாடுவர். இதனால், அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. மோர், குளிர்பானம், பழரசம், கரும்புச்சாறு, இளநீர், தர்ப்பூசணி ஆகியவற்றை விற்கும், நடைபாதை கடைகளும் ஆங்காங்கே முளைத்து உள்ளன.
அவை, 20 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகின்றன. புறநகர் பகுதிகளில், டீக்கடை, ஹோட்டல், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றிலும், குளிர்பானம், இளநீர், பழரசக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கம் காரணமாக, இரவு வரையிலும் அவற்றின் விற்பனை தொடர்கிறது.

