sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

/

 7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

 7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

 7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்


ADDED : நவ 24, 2025 03:11 AM

Google News

ADDED : நவ 24, 2025 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்: உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவமனைக்கு அழைத்த போலீசாரின் அழைப்பை ஏற்காமல், பெண் துாய்மை பணியாளர்கள், போராட்டத்தை தொடர்ந்தனர்.

அம்பத்துார், கல்யாணபுரம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில், ஏழாவது நாளாக நேற்றும், நான்கு பெண் துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், திருவள்ளூர் மாவட்ட மருத்துவ குழுவினர், நேற்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அவர்களுக்கு, ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறைவாக இருப்பதாக, அம்பத்துார் போலீசாருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி, உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார், துாய்மை பணியாளர்களை சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்ல அழைத்தனர்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நான்கு பெண் துாய்மை பணியாளர்களும், உழைப்போர் உரிமை இயக்கத்தினரும், போலீசாரின் அழைப்பை ஏற்காமல், போராட்டத்தை தொடர்ந்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், 'எங்களுக்கு மீண்டும் பழைய பணி வேண்டும். அதற்காக தான் நாங்கள் போராடுகிறோம். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பேச்சு நடத்த வேண்டும். அதுவரை எத்தனை நாட்களானாலும் போராட்டம் தொடரும்' என்றனர்.






      Dinamalar
      Follow us