/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவர் கள்ளத்தொடர்பு மனைவி தற்கொலை முயற்சி
/
கணவர் கள்ளத்தொடர்பு மனைவி தற்கொலை முயற்சி
ADDED : பிப் 22, 2024 12:50 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சபீர். இவரது மனைவி அமீனா, 30. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், சபீருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மன விரக்தியடைந்த அமீனா, அளவுக்கு அதிகமான மாத்திரை சாப்பிட்டு, வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது வீட்டிற்கு வந்த உறவினர்களான சமீர், சுகைல் ஆகியோர், மயங்கிக் கிடந்த அமீனாவை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அமீனாவின் தாய் மும்தாஜ், 57, சபீர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.