ADDED : ஆக 03, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம்,சேர்ந்து வாழ வர மறுத்த மனைவியை, கத்தியால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.
அயனாவரத்தைச் சேர்ந்தவர் கிரண்குமார், 44. இவரது மனைவி ராஜேஸ்வரி, 34. கணவரை பிரிந்த ராஜேஸ்வரி இரண்டு பிள்ளைகளுடன் தனியே வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம், அயனாவரம் வி.பி., காலனி பகுதியில் ராஜேஸ்வரி மகனுடன் நடந்து சென்றார். அப்போது வழிமறித்த கிரண்குமார், சேர்ந்து வாழ வருமாறு அழைத்து தகராறு செய்துள்ளார். இதற்கு மறுத்த ராஜேஸ்வரியை, மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டி தப்பினார்.
காயமடைந்த ராஜேஸ்வரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அயனாவரம் போலீசார், நேற்று கிரண்குமாரை கைது செய்தனர்.