/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியின் அடகு நகை மீட்க செயின் பறித்த கணவர் கைது
/
மனைவியின் அடகு நகை மீட்க செயின் பறித்த கணவர் கைது
ADDED : ஜூலை 01, 2025 12:24 AM
கொளத்துார், கடன் தொல்லை மற்றும்அடகு வைத்த மனைவியின் நகையை மீட்க, செயின் பறிப்பில் ஈடுபட்ட கணவரை, போலீசார் கைது செய்தனர்.
கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் வளர்மதி, 52. மே 29ம் தேதி, கொளத்துாருக்கு பைக்கில் வந்த வாலிபர், வளர்மதி அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.
சுதாரித்த வளர்மதி, செயினை பறிகொடுக்காமல் பாதுகாத்தார். இது குறித்து கொளத்துார் போலீசில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முகமது அன்சாரி, 30, என்பவரை, காஞ்சிபுரத்தில் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், முகமது அன்சாரி, உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது. மேலும், மனைவியின் நகைகளை அடகு வைத்து, கடனை ஓரளவுக்கு அடைத்து உள்ளார்.
மனைவி, நகை கேட்டு தினமும் தொந்தரவு செய்ய, கடன் அடைக்கவும், நகை மீட்கவும் செயின் பறிப்பில் அன்சாரி ஈடுபட்டது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.