ADDED : பிப் 04, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடபழநி,: வேலைக்கு செல்லாமல் மது அருந்துவது குறித்து மனைவி திட்டியதால், பிளம்பர் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் சங்கர், 58; பிளம்பர். மது பழக்கத்திற்கு அடிமையான சங்கர் கடந்த ஒரு வாரமாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
வேலைக்கு செல்லாமல், மது அருந்தி வீட்டில் இருப்பது குறித்து அவரது மனைவி திட்டியுள்ளார். இதனால், மனவுளைச்சலில் இருந்த சங்கர் நேற்று முன்தினம் மாலை துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தகவல் அறிந்து வந்த வடபழநி போலீசார் அவரது உடலை மீட்டு கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.