sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆமை வேகத்தில் மழை நீர் வடிகால் பணி 2 மாதமாக நெரிசலால் தவிக்கும் ஐ.சி.எப்.,

/

ஆமை வேகத்தில் மழை நீர் வடிகால் பணி 2 மாதமாக நெரிசலால் தவிக்கும் ஐ.சி.எப்.,

ஆமை வேகத்தில் மழை நீர் வடிகால் பணி 2 மாதமாக நெரிசலால் தவிக்கும் ஐ.சி.எப்.,

ஆமை வேகத்தில் மழை நீர் வடிகால் பணி 2 மாதமாக நெரிசலால் தவிக்கும் ஐ.சி.எப்.,


ADDED : ஏப் 14, 2025 01:47 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐ.சி.எப்.:அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் அருகில் ஐ.சி.எப்., பகுதி உள்ளது. இங்கு, வில்லிவாக்கத்தில் இருந்து, அயனாவரத்தை நோக்கி செல்லும் பிரதான பாதையான, ஐ.சி.எப்., பிரதான சாலை உள்ளது.

இச்சாலையின் நடுவே, கம்பர் அரங்கத்தின் அருகில், குறிப்பிட்ட துாரம் வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, கடந்த பிப்., முதல் வாரத்தில் மாநகராட்சி துவங்கியது. இதனால், 100 மீட்டருக்கு மேல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

சிறிய சாலையில் இருவழியாக செல்லும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது, புதிய சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.

இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில், ''இரண்டு மாதமாக, ஐ.சி.எப்., பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறோம். தற்போது, 95 சதவீத பணிகள் நிறைவடைந்திருப்பதாக தெரிகிறது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து, சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.






      Dinamalar
      Follow us