/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்றவர் கைது
/
ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்றவர் கைது
ADDED : அக் 30, 2024 12:17 AM

ஆவடி, பழவந்தாங்கல் நேரு காலனியைச் சேர்ந்தவர் மலர், 57. இவர், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் நில பிரச்னை தீர்வு பிரிவில், கடந்த 24ம் தேதி அளித்த புகார்:
ஆவடி வெள்ளானுார் கிராமம், ஆர்ச் அந்தோணியார் நகரில், மனை எண்: 736ல் எனக்கு 3,000 சதுரடி நிலம் உள்ளது.
கடந்த 2021 ஜனவரியில், ஆவடி சந்தை பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்றபோது, சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டன. இதுகுறித்து, 2021 மார்ச்சில், நாளிதழில் விளம்பரம் கொடுத்ததோடு, போலீசிலும் புகார் அளித்தேன்.
கடந்த 2022 ஜூலையில், 'உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ்' வங்கி முகப்பேர் கிளையில், சேமிப்பு கணக்கை துவக்கிய மோசடி நபர், காணாமல் போன என் சொத்தின் ஆவணத்தை, 10 லட்ச ரூபாய்க்கு, 'டிபாசிட்' செய்துள்ளார். டிபாசிட் தொகை அதிகமாக இருந்ததால், வங்கி சார்பில் எனக்கு கடிதம் வந்தது.
இதையடுத்து, வங்கிக்கு சென்று கணக்கை முடக்கினேன். சொத்து தொடர்பாக வில்லங்க சான்று போட்டு பார்த்தபோது, எனக்கு சொந்தமான, 3,000 சதுர அடி இடத்தை, அமுதா, ராஜேஷ் ஆகிய இருவருக்கு விற்றதுதெரியவந்தது.
இதன் மதிப்பு, 55 லட்சம் ரூபாய். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, நிலப்பிரச்னை தீர்வு பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி வழக்கு பதிந்து, ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்ற ஜோசப், 57, என்பவரை கைது செய்தார்.