sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோயம்பேடில் வழிப்பறி திருடனுக்கு தர்ம அடி

/

கோயம்பேடில் வழிப்பறி திருடனுக்கு தர்ம அடி

கோயம்பேடில் வழிப்பறி திருடனுக்கு தர்ம அடி

கோயம்பேடில் வழிப்பறி திருடனுக்கு தர்ம அடி


ADDED : பிப் 10, 2024 12:20 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 24. இவர், கோயம்பேடு காய்கறி அங்காடிக்கு, நேற்று முன்தினம் இரவு கருவேப்பிலை, கொத்தமல்லி கட்டுகளை சரக்கு வேனில் ஏற்றி வந்தார். பின், உணவு தானிய மார்க்கெட் பகுதியில் வேனை நிறுத்தி, 'பார்க்கிங்' பகுதியில் துாங்கினார்.

நேற்று அதிகாலையில் துாங்கி கொண்டிருந்த சதீஷை மர்ம நபர் ஒருவர் எழுப்பி, கழுத்தில் கத்தி வைத்து பணம், மொபைல் போன் ஆகியவற்றை பறிக்க முயற்சித்தார்.

சதீஷின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு துாங்கிக்கொண்டிருந்த மற்ற சரக்கு வாகன ஓட்டுனர்கள் ஓடிவந்து, மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், அம்பத்துார், இந்திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், 22, என்பதும், இரவு வேளையில் கோயம்பேடு பகுதியில் துாங்குவோரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்து வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us