/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மறுகுடியமர்வுக்கு அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா இல்லாததால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
/
மறுகுடியமர்வுக்கு அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா இல்லாததால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
மறுகுடியமர்வுக்கு அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா இல்லாததால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
மறுகுடியமர்வுக்கு அரசு வழங்கிய இடத்திற்கு பட்டா இல்லாததால் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
ADDED : நவ 04, 2024 04:31 AM

அம்பத்துார்:கொரட்டூர், அம்பத்துார், திருவேற்காடு ஏரியை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக தங்கியிருந்த 2,000க்கும் மேற்பட்டோர், 2008ம் ஆண்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்களுக்கு, 2009ல், ஆவடி, மோரை ஊராட்சியில், சர்வே எண்: 289ல் 16.94 ஏக்கர்; 294/6ல் 23.61 ஏக்கர் மற்றும் 294/7ல் 17.76 ஏக்கர் என, 60 ஏக்கர் அளவுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, புதிய கன்னியம்மன் நகர் உருவாக்கப்பட்டு, மக்கள் மறுகுடியமர்த்தப்பட்டனர்.
இந்நகரில் ஏ முதல் டி வரை நான்கு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 450 சதுர அடி ஒதுக்கப்பட்டது. இதற்கு சாட்சியாக, வட்டாட்சியர் சார்பில் முத்திரையிடப்பட்ட டோக்கன்கள், கையொப்பமிட்டு வழங்கப்பட்டன.
இதில், குடியிருப்பாளர்கள் வீடுகளை கட்டிக் கொண்டனர். இங்கு பள்ளி, பேருந்து நிலையம், அங்கன்வாடி மையம், சுடுகாடு என, பல்வேறு பொது பயன்பாட்டு இடங்களும் ஒதுக்கப்பட்டன. தற்போது இப்பகுதி 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நகராக மாறியுள்ளது.
இந்நிலையில், இங்குள்ள காலி மனைகளை, அரசியல் பின்னணி மற்றும் பண பலம் உடைய பலரும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து வருகின்றனர்.
குறிப்பாக, வட்டாட்சியரால் வழங்கப்பட்ட டோக்கன்களை போலியாக தயாரித்து, அதன் வைத்து மின் வாரிய இணைப்பு பெற்று, போலி ஆவணத்தை தயாரித்துள்ளனர். பொது பயன்பாடு நிலத்தையும், தங்கள் பெயருக்கு மாற்றி வருவதாக, அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, மோரை பகுதிவாசிகள் கூறியதாவது:
வீடுகளை இழந்த உண்மையான பயனாளிகளுக்கு, வருவாய் துறை வாயிலாக டோக்கன் வழங்கப்பட்டு, எங்களின் ரேஷன் அட்டையிலும் முத்திரை பதிவிடப்பட்டது.
போலி டோக்கன் பெற்றவர்களின் ரேஷன் கார்டுகளில், அந்த முத்திரை இருக்காது. ஒரே வரிசை எண்ணில் போலி டோக்கன்கள் அச்சடித்து, பொது பயன்பாட்டு இடங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய கன்னியம்மன் நகர் கிராம முன்னேற்ற சங்க செயலர் கே.இளமாறன் கூறியதாவது:
கன்னியம்மன் நகர் காலி மனைகள் ஆக்கிரமிப்பு குறித்து, கலெக்டர் மற்றும் வட்டாட்சியருக்கு தொடர்ந்து புகார் கொடுத்து வருகிறோம். ஆனாலும் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.
வறுமையின் காரணமாக, பயனாளிகள் சிலர், தங்களுக்கு கிடைத்த இடத்தை மற்றவர்களுக்கு விற்கின்றனர். இவருக்கு ஆதரவாக, மோரை ஊராட்சி உறுப்பினர் ஒருவரும் உள்ளார். இதற்கிடையே 14 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.