sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கோயம்பேடு சந்தை 'இ' சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு

/

 கோயம்பேடு சந்தை 'இ' சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு

 கோயம்பேடு சந்தை 'இ' சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு

 கோயம்பேடு சந்தை 'இ' சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு


ADDED : டிச 29, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: போக் குவரத்து நெரிசல் நிலவும் கோயம்பேடு சந்தை 'இ' சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் அமைப்பது அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோயம்பேடு சந்தை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக 'இ' சாலை உள்ளது.

இச்சாலையில், ஆம்னி பேருந்து நிலையம், கோயம்பேடு காவல் நிலையம், சி.எம்.டி.ஏ., அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.

ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அரசு பேருந்துகள் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

கோய ம்பேடு சந்தையை ஒட்டியுள்ளதால் மலர், காய்கறி மற்றும் பழ அங்காடிகளுக்கு செல்லும் நுழைவாயில்களும் இச்சாலையில் அமைந்துள்ளன.

தவிர மெட்ரோ ரயில் திட்டப்பணிகளும், மழைநீர் வடிகால்வாய் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், சாலை குறுகலாகி, நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே நெரிசலாக உள்ள இச்சாலையில், ஆம்னி பேருந்து நிலையத்தை ஒட்டி 10க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளன.

அடுத்தடுத்து புதுப்புது கடைகள் அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கு உணவு அருந்த வருவோர், சாலையோர ம் வாகனங்களை நிறுத்துவதால், நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.

இதனால், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கோயம்பேடு சந்தை 'இ' சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.






      Dinamalar
      Follow us