ADDED : மார் 07, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் சாத்துக்குடி அதிகளவில் விளைகிறது. இங்கு இரண்டு பருவங்களில், சாத்துக்குடி அறுவடை நடக்கிறது. தற்போது இரண்டாவது பருவ அறுவடை நடந்து வருகிறது. விளைச்சல் அதிகரிப்பால், கோயம்பேடு சந்தைக்கு, சாத்துக்குடி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளன.
குறிப்பாக, நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் வரத்து உள்ளது. இதனால், 1 கிலோ சாத்துக்குடி 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாலையோரங்களிலும், வாகனங்களிலும் வைத்து சாத்துக்குடி விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது.

