/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இந்திய மகளிர் பேட்மின்டன் 16 பல்கலைகள் பங்கேற்பு
/
இந்திய மகளிர் பேட்மின்டன் 16 பல்கலைகள் பங்கேற்பு
ADDED : ஜன 09, 2024 12:22 AM

சென்னை, அகில இந்திய பல்கலைக்கழங்களில் கூட்டமைப்பு, எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, அகில இந்திய பெண்கள் பேட்மின்டன் போட்டியை, செங்கல்பட்டு, காட்டாங்கொளத்துாரில் நேற்று துவங்கின.
நாடு முழுதும், தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு மண்டலங்களில் இருந்து மொத்தம், 16 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன.
'லீக்' மற்றும் நாக் அவுட் முறையில், தனி நபர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று, ரோஹ்தக் மஹர்ஷி தயானந்த் பல்கலை அணி, 3 - 0 கணக்கில் சென்னை பல்கலையை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 3 - 0 கணக்கில், புனே சாவித்ரிபாய் பூலே பல்கலையை தோற்கடித்தது.
கோல்கட்டா அடாமாஸ் பல்கலை, 2 - 1 கணக்கில் டில்லி பல்கலையை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து, நாளை வரை நடக்கின்றன.