sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா துவக்கம்

/

வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா துவக்கம்

வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா துவக்கம்

வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா துவக்கம்


ADDED : நவ 02, 2024 12:38 AM

Google News

ADDED : நவ 02, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

சென்னையில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் ஒன்றாக வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. கோவிலில், இந்தாண்டு கந்த சஷ்டி விழா, வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்பாட்டுடன் நேற்று துவங்கியது.

விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 7:00 மணிக்கு, மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்குகிறது. தினமும் காலை முதல் மதியம் வரையிலும், மாலை முதல் இரவு வரையிலும் நடக்கிறது.

இன்று முதல் 12ம் தேதி வரை, தினமும் இரவு மங்களகிரி விமானம்; சந்திரபிரபை; ஆட்டுக்கிடா வாகனம்; நாக வாகனம்; மங்களகிரி விமானம் ஆகியவற்றில், பாலசுப்பிரமணிய சுவாமி மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் பிரதான நாளான, 7ம் தேதி காலை 6:00 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்கி உச்சி காலத்துடன் பூர்த்தியாகிறது.

அதைத் தொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது. பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.

வரும், 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம்; மயில் வாகன புறப்பாடு நடக்கிறது.

திருக்கல்யாண விருந்து இரவு 8:00 மணிக்கு வழங்கப்படுகிறது. நவ., 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை, இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

பங்கேற்கலாம்

வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, இன்று முதல் 7ம் தேதி வரை லட்சார்ச்சனை திருவிழா நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அர்ச்சனை ஒன்றுக்கு, 250 ரூபாய் செலுத்தி பங்கேற்கலாம். பங்கேற்கும் பக்தர்களுக்கு முருக பெருமானின் பிரசாதம் வழங்கப்படும்.








      Dinamalar
      Follow us