sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பழங்குடியின பொருட்கள் கண்காட்சி கைவினை பொம்மைகள் வாங்க ஆர்வம்

/

பழங்குடியின பொருட்கள் கண்காட்சி கைவினை பொம்மைகள் வாங்க ஆர்வம்

பழங்குடியின பொருட்கள் கண்காட்சி கைவினை பொம்மைகள் வாங்க ஆர்வம்

பழங்குடியின பொருட்கள் கண்காட்சி கைவினை பொம்மைகள் வாங்க ஆர்வம்


ADDED : நவ 21, 2024 11:59 PM

Google News

ADDED : நவ 21, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் கோவில் எதிரே உள்ள கலாசேத்ரா மைதானத்தில், 'ஆதி மஹோத்சவ்' என்ற பெயரில் நடந்துவரும் கண்காட்சியில், பழங்குடியின மக்களின் பல்வேறு தயாரிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில், தங்கள் தயாரிப்புகளை இடம் பெறச்செய்வதற்காக, அசாம், மணிப்பூர், நாகலாந்து, ஜார்க்கண்ட், கர்நாடகா, ஹிமாச்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, கைவினை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

நெல்மணிகளால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள், அருவி போல ஓசை தரும் மூங்கில், ஒளிரும் குடுவைகள், மூங்கில் படகுகள், வித்தியாசமான மணிமாலைகள், மண் பாத்திரங்கள், ஆடைகள் என, அபூர்வமான பல பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், தினமும், பழங்குடியின மக்களின் பல்வேறு கலாசார நடன நிகழ்வுகளும் நடக்கின்றன. பழங்குடியினரின் கலாசார உணவுகளும் விற்கப்படுகின்றன. வரும் 24ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.






      Dinamalar
      Follow us