sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை

/

வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை

வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை

வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி தள்ளுபடி சலுகை


ADDED : செப் 01, 2025 12:56 AM

Google News

ADDED : செப் 01, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பெசன்ட் நகர் கோட்டத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கான வட்டி தள்ளுபடி சலுகையை, வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக வீட்டு வசதி வாரியம், பெசன்ட் நகர் கோட்டத்தில், தவணை முறையில் வீடு, மனை ஒதுக்கீட்டு பெற்றவர்களுக்கு, வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மனை, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பிற்கான மாத தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்கான அபராத வட்டி, முழுதும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டி, ஆண்டிற்கு ஐந்து மாதத்திற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனவே, பெசன்ட் நகர் கோட்டத்தில் ஒதுக்கீடு பெற்று, 2015 மார்ச் 31க்கு முன் தவணை காலம் முடிந்தும் நிலுவை தொகையை செலுத்தாதவர்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி, ஒரே தவணையில் செலுத்தி, கிரையப்பத்திரம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us