/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரிக்கெட் போட்டி சிறார்களுக்கு அழைப்பு
/
கிரிக்கெட் போட்டி சிறார்களுக்கு அழைப்பு
ADDED : டிச 02, 2024 01:49 AM
சென்னை:சி.எஸ்.கே., அகாடமி மற்றும் திருவள்ளூர் கிரிக்கெட் சங்கம் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான, 'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளன.
இதில், 15 வயதிற்கு உட்பட்ட, திருவள்ளூர் மாவட்ட எல்லையில் உள்ள பள்ளி சிறுவர்களின் அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும். வீரர்கள், 2009 செப்., 1க்கு முன் பிறந்திருக்க வேண்டும்.
போட்டிக்கான விண்ணப்பங்கள், இன்று மாலை 6:00 மணி முதல், அம்பத்துார் சாலையில் உள்ள திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், டிச., 14க்குள் சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு, 98404 82220, 94443 29232 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.