/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டி - 20' கிரிக்கெட் கல்லுாரிகளுக்கு அழைப்பு
/
'டி - 20' கிரிக்கெட் கல்லுாரிகளுக்கு அழைப்பு
ADDED : பிப் 02, 2025 12:37 AM
சென்னை, சத்யபாமா பல்கலை ஸ்ரீபெரும்புதுார் கேம்பஸ் சார்பில், டாக்டர் எம்.ஜி.ஆர்., கோப்பைக்கான தென்னிந்திய கல்லுாரிகளுக்கு இடையிலான 'டி - 20' கிரிக்கெட் போட்டி, வரும் 20ம் தேதி துவங்குகிறது.
போட்டியில், அரசு மற்றும் தனியார் பல்கலைகள், அண்ணா பல்கலை, தனியார் மருத்துவ பல்கலை உட்பட அனைத்து கல்லுாரிகளும் பங்கேற்கலாம். போட்டியில், 'நாக் - அவுட்' அடிப்படையில், ஐ.சி.சி., டி - 20 விதிமுறைகள் பின்பற்றப்படும்.
போட்டியில் பங்கேற்க விருப்பும் கல்லுாரி அணிகள், வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு 98407 04061, 99629 04061 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சத்யபாமா பல்கலை தெரிவித்துள்ளது.