sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மாநகராட்சியில் 262 பேருக்கு பணி நிரந்தரம்

/

 மாநகராட்சியில் 262 பேருக்கு பணி நிரந்தரம்

 மாநகராட்சியில் 262 பேருக்கு பணி நிரந்தரம்

 மாநகராட்சியில் 262 பேருக்கு பணி நிரந்தரம்


ADDED : நவ 14, 2025 03:02 AM

Google News

ADDED : நவ 14, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தற்காலிக பணியாளர்களாக, 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 226 பேரை, சென்னை மாநகராட்சி பணி நிரந்தரம் செய்துள்ளது.

புறநகர் பகுதிகளை சேர்த்து சென்னை மாநகராட்சி, 2011ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, உள்ளாட்சிகளில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றி வந்த, 908 பேர் தினக்கூலி பணியாளர்களாக, மாநகராட்சியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள், வளசரவாக்கம், அம்பத்துார், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வந்தனர்.

மாநகராட்சி பணி நிரந்தரம் செய்யாமல் இழுத்தடித்ததால், பலர் பணியில் இருந்து விலகி வேறு பணிக்கு சென்றனர்; சிலர் இறந்து விட்டனர்.

இதையடுத்து, 431 பேர் தொடர்ந்து பணி செய்து வந்தனர். இவர்கள் பணி நிரந்தரம் கோரி, 2018ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நிரந்தரம் செய்ய, 2023ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனாலும், பணி நிரந்தரம் செய்யாமல் மாநகராட்சி இழுத்தடித்ததால், பாதிக்கப்பட்டோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, 433 ஊழியர்களில், 262 பேர் முதற்கட்டமாக பணி நிரந்தரம் செய்து, மாநகராட்சி நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us